மணிப்பூர் தலைநகமான இம்பாலில் உள்ள வணிக முனையமான காந்தி அவென்யூ பகுதியில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அருகாமையில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடி பேனல்கள் உடைந்து நொறுங்கின. வெடி குண்டை வெடிக்க வைத்தது யார் என்று தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.