அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் காரணத்தினால் படத்தில் நடிப்பதை குறைத்தார்


அனுஷ்கா புதிய படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்கanuska உள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. 2005–ல் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘அருந்ததி’ படம் பெரிய திருப்பு முனையை கொடுத்தது. இந்த படம் தமிழகத்திலும், ஆந்திராவிலும் வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு மளமளவென படங்கள் குவிந்தன.ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தெலுங்கிலும் கை நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். அனுஷ்கா பற்றி ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. நடிகர் ஆர்யாவுடன் இணைத்து பேசப்பட்டார். தெலுங்கு நடிகர் பிரபாசை காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை அவர்கள் மறுத்தனர்.

34 வயது அனுஷ்காவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவரை விட வயது குறைந்த நடிகைகள் பலர் திருமணம் செய்து குடும்பம் நடத்த போய் விட்டனர். எனவே அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணத்தை முடித்து விட பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஒருவரை பேசி முடித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.தற்போது சிங்கம் படத்தின் 3–ம் பாகமாக தயாராகும் எஸ்–3, மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்களில் அனுஷ்கா நடித்துக்கொண்டு இருக்கிறார். எஸ்–3 படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. பாகுபலி படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

பாகுபலி படம் திரைக்கு வந்ததும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புதிய படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார்.சமந்தாவுக்கும், அனுஷ்காவுக்கும் அடுத்தடுத்து திருமணங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Leave a Response