நடிகர் சிம்புவை பெங்களூரில், தமிழக போலீசார் சுற்றிவளைத்து கைது செய்யதுள்ளனர் என சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. இது உண்மையல்ல வெறும் வதந்தி தான். சிம்பு முதலில் பெங்களூரே செல்லவில்லை. சென்னையில் தான் உள்ளார். வீட்டி கேட்டின் முன் போலீஸ் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றார். அவர்கள் இருக்கும்போதே சிம்பு தினமும் வீட்டிற்கு சென்றுதான் வருகின்றார். சென்னையை சுதந்திரமாக சுற்றிவருகின்றாராம். ஆனால் இதுவரை யார் கண்ணிலும் படாமல் சுற்றிவருகின்றார் என்பது தான் ஆச்சரியம்.
நிலைமை இப்படி இருக்க, சிம்புவை கைது செய்துவிட்டதாக நெட் குறும்பர்கள் கதை கட்டி விட்டுள்ளனர். அந்த புகைப்படம் ஏதே வாக்குசாவடியில் ஒட்டுபோட போகும்போது, போலீசார் அவரை பத்திரமாக அழைத்து சென்றபோது எடுத்த புகைப்படம் போல் உள்ளது.