சிக்கலில் தவித்த ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் கன்ஃபார்ம் – டிசம்பர் 4

rajini-murugan-pospand

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொன்ராம் இயக்கியபடம் ரஜினிமுருகன். திருப்பதி பிரதர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படம் முடிந்து பலநாட்களாகியும் ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் சிக்கியது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து பின் பணப்பிரச்சனையால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் 4-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றுவரை 99 சதவீதம் படம் வெளியாக வாய்ப்பில்லை என்ற சூழ்நிலை தான் நிலவி வந்தது. ஆனால் இன்று படம் ரிலீசாவதில் இருந்த சிக்கல் தீர்ந்ததுவிட்டதாக சொல்லப்படுகின்றது.

ஈராஸ், ஸ்டுடியோ கிரீன், மதுரை அன்பு மற்றும் சிறு குறு பைனான்சியர்களுக்கு கடன் பாக்கி வைத்திருந்ததால், ரஜினி முருகன் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தனர். பணத்தை கொடுத்துவிட்டு ரிலீஸ் செய்துகொள்ளுமாறு கூறினார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் இன்று ஒன்றுகூடி பேசி ஒரு சுமூகமான முடிவை எடுத்துள்ளனராம். ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் மற்றும் மதுரை அன்பு ஆகியோருக்கு கொடுக்கபட வேண்டிய தொகைகளில் ஓரளவிற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பணத்தை கொடுத்துள்ளது. இதனால் சிக்கல் தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் படத்தை பார்த்த மதுரை அன்பு உட்பட சிலர் படம் நன்றாக உள்ளது எனக்கூறியுள்ளனர். படம் ரிலீஸ் ஆனால் வெற்றிபெரும் என்பதால் படத்தின் ரிலீசிற்கு பிறகு மீதத்தொகையை வாங்கிக்கொள்ளாலாம் என படத்தின் ரிலீசிற்கு பச்சைகொடி காட்டியுள்ளனராம்.

இதனால் நேற்றுவரை ரிலீஸ் ஆகுமா? என்று கேள்வியை எழுப்பிக்கொண்டிருந்த ரஜினி முருகன் படத்திற்கான சிக்கல் இன்று தீர்ந்துவிட்டது. அறிவித்தபடியே டிசம்பர் 4 அன்று படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Satheesh Srini

Leave a Response