நடிகர் விஜய்யால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார் பிரபல சண்டைப்பயிற்சியாளரும், தற்போதைய தயாரிப்பாளருமாகிய திலிப் சுப்புராயன். அஞ்சல படத்தின் இசை தட்டை நடிகர் விஜய் வெளியிட்டதே அவருடைய மகிழ்ச்சிக்கு காரணம்.
இதுகுறித்து திலிப்சுப்புராயன் தெரிவித்துள்ளதாவது:- ‘இடை விடாமல் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததால் விஜய்யிடம் இசையை வெளியிட முடியுமா? என்று கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்றுச்சொல்லி அஞ்சல படத்தின் இசைத்தட்டை வெளியிட்டுவிட்டார். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம், அதில் முக்கியமானதாக அவர் என்னிடம் அன்று கூறிய ஊக்க வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றிப் பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் திலிப் சுப்புராயன்.
விமல், நந்திதா, பசுபதி நடித்த இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.