தயாரிப்பாளராக மாறிய சிவாஜியின் பேரன்..!

dhusyanth-ramkumar

நடிகர் சிவாஜி கணேசன் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ‘சக்சஸ்’ படத்தின் மூலம் நடிகரானார். சக்சஸ் மற்றும் மச்சி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை தரவில்லை. அதன் பிறகு சிவாஜி ப்ரொடக்ஷனி-ல் தயாரிப்பு மேற்பார்வையை கவனித்து வந்தார். இந்நிலையில் ‘ஈஷான் புரொடக்ஷன்ஸ்’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

முதல் படமே தன்னுடைய சித்தப்பா பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படத்தை தயாரிக்கின்றார். மேலும் நடிகை ஆஷ்னா சவேரி மற்றும்எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர்.  அமுதேஷ்வா என்ற அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார். துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி துஷ்யந்த் இருவரும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

 

Leave a Response