படத்தை நிறுத்திய தாணு; குழப்பத்தில் விக்ரம்..!

vikram-dhaanu-anand-shankar

ஐ படத்தை முடித்ததும் விக்ரம் ‘மர்ம மனிதன்’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ ஆகிய இருபடங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இப்படங்களில் நடிப்பதற்காக பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவிற்க்கும், கலைப்புலி s.தாணுவிற்கும் அடுத்தடுத்து கால்சீட் கொடுத்தார் விக்ரம். முதலில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவிற்க்காக ‘பத்து எண்ணுறதுக்குள்ள ‘படத்தை விக்ரமை வைத்து இயக்கினர் விஜய் மில்டன். படம் சென்ற மாதம் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்விபடமாக அமைந்துவிட்டது.

இதையடுத்து ‘மர்ம மனிதன்’ படத்தை ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கவிருந்தார். இதற்காக ஆனந்த் ஷங்கர் தாணுவை அணுகியபோது, கபாலி படத்தில் பிசியாக உள்ளேன். படத்தை முடித்தபின் பொறுமையாக துவங்கலாம் எனக்கூறிவிட்டாராம். அதுவரை காத்திருந்தால் விக்ரமிற்கு படம் ஏதும் இல்லாமல் கேப் விழுந்துவிடும் என்பதால் லைகா தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். லைகாவும் பச்சைக்கொடி காட்டி படத்தை துவங்கும் ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்துள்ளனர். படப்பிடிப்பு துவங்க சிலநாட்கள் இருந்த நிலையில், எந்திரன்-2 படத்தின் வேலைகளை கவனிக்கவிருப்பதால் படத்தை தள்ளிவைத்துக்கொள்ளலாம் என லைகா கூறிவிட்டதாம்.

ஆனால் படத்தை நிறுத்தியது லைகா இல்லை, தாணுதான் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பொறுமையாக எடுக்கலாம் எனக்கூறிய பின், தன்னிடம் சொல்லாமல் லைகாவிடம் சென்றதால், தாணு தான் உள்ளே புகுந்து படத்தை எடுக்கவிடாமல் நிறுத்திவிட்டாராம். இதனால் விக்ரமும், ஆனந்த் ஷங்கரும் படத்தை தொடரலாமா? அல்லது டிராப் செய்துவிடலாமா? என குழப்பத்தில் உள்ளனராம்.

Satheesh Srini

Leave a Response