சமீபத்தில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டது. நயன்தாராவை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் திரையரங்குகளுக்கு திரும்ப திரும்ப படையெடுத்து வருகின்றது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் திக்குமுக்காடும் வகையில் விடிய விடிய விருந்து வைத்துள்ளாராம் நயன்தாரா.
விக்னேஷ்சிவனுடன் நயன்தாரா காதல் என்ற செய்தி வெளிவந்தது முதல் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்தது மட்டுமல்லாமல், அவரின் நடை, உடை, பாவனை அனைத்தையும் பிரபுதேவா போன்றே மாற்றியுள்ளார். நானும் ரௌடிதான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே இதை காண முடிந்தது. இந்நிலையில் படம் சிறப்பான வெற்றியை பெற்றதோடு, நயந்தாராவையும் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவைத்து அசத்திவிட்டார் விக்னேஷ்சிவன்.
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவனுக்கு மட்டும் தனியாக விருந்துகொடுத்துள்ளார். விருந்து என்றால் சாதாரண விருந்து இல்லை, சகல சௌபாக்கியமும் நிகழ்ந்துள்ளது. இதற்குமுன் இப்படி ஒரு விருந்தை காணாத விக்னேஷ் சிவன் திக்குமுக்காடி போய்விட்டாராம்.