ஜாதி பெயரை சொல்லி இயக்குனரை அடித்து உதைத்த தாணு கோஸ்டி..!

image
தமிழ் திரைபடத்தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி வாரியச்சங்கம் லிட்.ல் இயக்குனரனாக பதவி வகித்துவரும் T.தீத்தமலை என்பவர் தயாரிப்பாளர் கலைப்புலி s.தாணு மீது பரபரப்பு தாக்குதல் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் T.தீர்த்தமலை புகார் அளித்துள்ள விவரம் பின்வருமாறு.

நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கூட்டுறவு வீட்டுவசதி வாரியச் சங்கம் லிட். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காண இடஒதுக்கீடு அடிப்படையில் வெற்றி பெற்று இயக்குனராக பதவி வகித்து வருகிறேன். நான் “புத்திரன் கோட்டை கிராமத்தில்” என்ற திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் 28.10.2015 புதன்கிழமை காலை 8.10 மணியளவில் மலேசியாவில் கபாலி படப்பிடிப்பிலிருந்து கலைப்புலி ­s.தாணு அவர்கள் என்னுடைய தொலைப்பேசிக்கு தொடர்புகொண்டு பேசினார். என்னை காலை 11.00 மணிக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் மேற்கண்ட எங்கள் வீட்டுவசதி சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது நீ போய் அதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். நானும் சரியாக காலை 11.00 மணிக்கு அங்கு சென்றேன். அங்கு இருந்த R.சிவகுமார் எனது ஜாதி பெயரைச்சொல்லி என்னை ரொம்ப அசிங்கமாகவும், மிக கேவலமாகவும் பேசி அடித்து உதைத்தார். இந்த சம்பவம் நடைபெறும் போது அங்கு இயக்குனர்கள் ஸ்ரீதர், ராபின்கிரிஸ் ஆகியோர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

சிவகுமார் கலைப்புலி s.தாணு, நடிகர் பாபு கணேஷ், பிரிமூஸ் தாஸ் ஆகியோர் சொல்லித்தான் உன்னை அடிக்கிறேன். உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் இந்த சங்கத்திற்குள் பார்த்தால் உன்னை உயிரோடு விடமாட்டேன், கொன்றுவிடுவேன், ஜாதி பெயரை நாயோடு ஒப்பிட்டு போடா என்றும் மேலும் எழுத்தில் எழுதமுடியாத பல வார்த்தைகளை பேசினார்.

உடனடியாக கலைப்புலி s.தாணு, நடிகர் பாபு கணேஷ், பிரிமூஸ் தாஸ், தயாரிப்பாளர் R.சிவக்குமார் ஆகியோர்கள் மீது தாழ்த்தப்பட்டவர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்புவேண்டும் எனவும் தீர்த்தமலை அவர்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில்  கோரியுள்ளார்.

Leave a Response