“வதந்தி பரப்ப 11 பேர் கொண்ட குழு இருக்கு” – வெங்கட்பிரபு கிண்டல்..!

‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் சூர்யா…

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொங்கலுக்கு இதன் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

இதனை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, “சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக வந்தவை வதந்திகளே. அவர் நலமாக உள்ளார். இப்படி வதந்திகளை பரப்புவதற்கென்றே 11 பேர் கொண்ட குழு இருக்கு போல தெரிகிறதே” என டிவிட்டரில் வதந்தி பரப்புவோரை நாடோடிகள் பாணியில் கிண்டலடித்துளார்.