பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் கதை தான் ‘காத்தம்மா’..!

அன்பான காதலன், அழகான காதலி.. அருமையான மலைப்பாங்கான கிராமத்து வாழ்க்கை, இடையே குறுக்கிடும் கிராமத்து வில்லன்கள்.. இதை வைத்து ஒரு அழகான கிராமத்து காதல் கதையை ‘காத்தம்மா’ என்கிற திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் எம்.டி.சுகுமார்.

5௦க்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இந்த சுகுமார். ஏன் சில தமிழ்ப்படங்களுக்கும் கூட பணியாற்றியிருக்கிறார். இவர் முதன்முதல் இயக்குன்றாக அறிமுகமாகி இருக்கும் படம் இது.

பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிஜு ராம், ஆதிரா ஜோடியாக நடிக்க வில்லனாக அசோக்ராஜா நடித்துள்ளார். கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.