ரஜினி படத்துடன் தைரியமாக வெளியாகும் ‘யாரோ ஒருவன்’..!

சில வருடங்களுக்கு முன்பு எவனோ ஒருவன் என்கிற பெயரில் ஒரு படம் வந்ததைப்போல தற்போது வெளியாக இருக்கும் படம் தான் ‘யாரோ ஒருவன்’. இதில் நாயகனாக ராம், நாயகியாக ஆதிரா அறிமுகம் ஆகின்றனர். இந்தப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி டைரக்டு செய்யும் கே.என்.பைஜூ, நம்ம டி.ஆர் மாதிரி அவரே படத்துக்கு இசையமைத்து, ஒளிப்பதிவும் செய்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

காணாமல் போன தனது மனைவியை துப்பறியும் நிபுணர் மற்றும் அவரது குழுக்களுடன் நாயகன் தேடி செல்கிறான். அவர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களே படத்தின் கதை. திகிலும், மர்மங்களும் நிறைந்த காடு மற்றும் வீடு போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் திகில் நிறைந்ததாக காட்சி படுத்தப்படுகிறது. லிங்கா வெளியாகும் அதே தினத்தில் இந்தப்படத்தை வெளியிடுகிறார் படத்தின் இயக்குனர் கே.என்.பைஜூ. காரணம் என் படத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறார் தைரியமாக.