வருண்மணியனுக்கு நன்றி சொன்ன த்ரிஷா..!

சில நாட்களுக்கு முன்னர் தான் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக ஒரு செய்தி பரவி, அதன்பின் இருவராலும் அது வதந்தி என சொல்லப்பட்டு புஸ்வாணமாகிப்போன நிகழ்வு நடந்தது.. ஆனால் தற்போது வேறொரு விஷயத்தில் வருண்மணியனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் த்ரிஷா.

வேறொன்றுமில்லை.. வருண்மணியன் தயாரிப்பில் கடந்தவாரம் ‘காவியத்தலைவன்’ படம் வெளியானது அல்லவா..? அந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த த்ரிஷா, படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பையும் இயக்குனரையும் பாராட்டிவிட்டு, இந்த சிறப்பு காட்சிக்காக வருண் மணியனுக்கு நன்றி என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளாராம்.