லிங்காவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

கே.எஸ்.ரவிக்குமாரின் கைவண்ணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அவரது பிறந்தநாளான டிச-12 அன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக வெளியாக உள்ளது லிங்கா.. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் லிங்கா படத்தின் கதை என்னுடைய முல்லைவனம் 999’ கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளது என மதுரையை சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் லிங்கா திரைப்படத்தின் கதை திருடப்பட்டது கிடையாது என்று படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும், கதாசிரியர் பொன்குமாரும் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ரவிரத்தினம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது. ஆக ‘லிங்கா’வை பிடித்திருந்த ஒரு சனியும் விட்டு ஒதுங்கியுள்ளது.