பாரதிராஜா டைரக்ஷனில் ஹீரோவாக பாடலாசிரியர் சினேகன்..!

2011ல் ‘உயர்திரு 420’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார் பாடலாசிரியர் சினேகன். அதன்பிறகு நடிப்புக்கு ரெண்டு வருஷம் இடைவெளிவிட்டவர் இப்போது திரும்பவும் அமுதேஸ்வர் என்பவர் இயக்கத்தில் ‘ராஜராஜசோழனின் போர்வாள்’ படத்தில் ஹீரோவாக நடித்தார்.

இப்போது அதிர்ஷ்டக்காற்று பாரதிராஜா மூலமாக அவர் பக்கமாக வீசத்தொடங்கியுள்ளது. ஆம்.. பாரதிராஜா இயக்கும் புதிய படத்தில் சினேகன் தான் ஹீரோ.. இது ஒருபக்கம் என்றால் இந்தப்படம் இயக்கும் வேலைகளுடன் ‘சலீம்’ நிர்மல்குமார், தனது மகன் மனோஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் இயக்கும் மூன்று படங்களில் நடித்தும் வருகிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.