“12 பேர் தான் சினிமாவ ஆளுறாங்க.. அவங்கள தாண்டி ஒன்னும் பண்ணமுடியாது” – குண்டு போட்ட வீரா..!

1பந்து 4ரன் 1விக்கெட்’ –இதுதான் இயக்குனர் வீரா இயக்கியுள்ள புதிய படம்.. டைட்டிலை பார்த்ததும் இதுவும் இன்னொரு கிரிக்கெட் படமா என கேள்வி எழுந்தாலும் இதில் கிரிக்கெட்டில் ஹாரரையும் காமெடியையும் மிக்ஸ் பண்ணி விளையாடியிருக்கிறார்களாம்.

வினய்கிருஷ்ணா, ஹாசிகா தத், சென்ராயன், லொள்ளுசபா ஜீவா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு உமேஷ் இசையமைக்க, நா.முத்துகுமார், சினேகன், ஹோசிமின் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆச்சர்யம் அளித்தார்.

தயாரிப்பாளரின் நண்பரான சக்சேனா தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில் இயக்குனர் வீரா பேசும்போது, “தமிழ்சினிமாவ 12 பேர் தான் கட்டி ஆளுறாங்க.. பட ரிலீஸ் பண்றதுன்னா கூட அவங்க கையில்தான் இருக்கு. அவங்கள தாண்டி ஒன்னும் பண்ணமுடியாது.. ஆனா அதையும் தாண்டி சக்சேனா சார் இந்தப்படத்தை ரிலீஸ் பண்றார்.. படம் வரும் டிச-5ஆம் தேதி வெளியாகிறது” என்று பகீர் விஷயம் ஒன்றை கொளுத்திப்போட்டார்.