‘வலியவன்’ யார்..? சரவணன்-ஜெய் கூட்டணி சொல்லப்போகும் பதில்..!

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையவேண்டாமே என்று சொன்ன கதையாக ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் தற்போது இயக்கிவரும் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் நம்ம ஜெய். அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. இன்னும் படத்தின் சில முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்கப்படவுள்ளது. பாடல்களை நா.முத்துகுமார் எழுத டி.இமான் இசையமைக்கிறார். இது ஒரு முழுநீள ஆக்ஷன் படமாக உருவாக்கி வருகிறது.