டூப் போடாமல் 15௦ அடி உயரத்தில் தொங்கிய அனுஷ்கா..!

அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி அவரது நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன.

ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற
படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபலி’ என்ற சரித்திர
படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. அதிலும் ருத்ரமாதேவி படத்திற்காக 15௦ நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிய அனுஷ்கா, தனக்காக டூப் எதுவும் போடாமல் 15௦ அடி உயரத்தில் தொங்கியபடி ரிஸ்க்கான காட்சிகளில் நடித்துள்ளாராம்.