ஜப்பானில் ஸ்ரீதிவ்யாவின் தாயாரை காப்பற்றிய ‘பென்சில்’ தயாரிப்பாளர்..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்சமீபத்தில் ‘பென்சில்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்பது தெரியும் தானே..! சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்றபோது திடீரென ஏற்பட்ட நூரி எனும் கடும் சூறாவளியில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் சிக்கினார்களாம்.

ஜப்பானில் உள்ளயட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படக்குழுவினர் விஞ்ச் மூலம் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அப்போது மலை உச்சியில் கடும் குளிர் நிலவியது.

பிராண வாயு பற்றாக்குறையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தாயார் கடுமையாக பாதிக்கப்பட்டபோது குழுவில் இருந்த தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்துள்ளார்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதே மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், குழுவினர் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ். படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இன்று படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.