“கடைசி நேரத்துல மிரட்டுறத தடுக்க நடவடிக்கை எடுங்க” – இயக்குனர் பேரரசு வேண்டுகோள்..!

‘சோக்கு சுந்தரம்’ என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ராமசாமியே கதாநாயகனாகவும் மாறி (!!) ரசிகர்களை அட்டாக் பண்ண வருகிறார். படத்தை ஆனைவாரி ஸ்ரீதர் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, “ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் ஒரு தயாரிப்பாளர் படும் பாடும், இயக்குனர் அடைகின்ற வலிகளும் யாருக்கும் தெரியாது. இன்று ஒரு படத்தின் தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் பிரச்சனை என்றால் அதை படம் வெளியாவதற்கு சில நாட்கள் இருக்கும்போதே பேசி தீர்க்கவேண்டும். அதைவிடுத்து படம் ரிலீஸ் ஆகும் தேதியில் பிரச்சனை செய்வது முறையற்ற செயல்.. தயாரிப்பாளர் சங்கத்தினர் இதில் தலையிட்டு கடைசி நேரத்தில்ல மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.