சினிமா டைரக்டராகிறார் ஆர்யாவின் தம்பி..!

அமரகாவியம் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ள ஆர்யாவின் தம்பி சத்யா அடுத்ததாக நடிக்கும் படம் தான் ‘சென்னை சிங்கப்பூர்’. இந்தப்படத்தில் திரைப்பட இயக்குனராக நடிக்கிறார் சத்யா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் அறிமுகமான ஹெப்பா படேல் என்பவர் நடிக்கிறார்.

சென்னையை சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கபூருக்கு வாய்ப்பு தேடி வருகிறான். அங்கே அவன் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்களும் ருசிகரமாக படமாக்கப்பட்டு உள்ளது.

இந்தபடத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பல்வேறு ஆவன படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர் என்னும் அறிமுக இயக்குனர் கதை, திரைக்கதை அமைத்து இந்தப்படத்தை இயக்குகிறார். காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம், சிங்கப்பூர் மீடியா அதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது.