“மீண்டும் ‘புதிய பாதை’ போட்டிருக்கிறாய்” – சிஷ்யனுக்கு வாழ்த்து சொன்னார் குரு..!

யார் பாராட்டுவதை விடவும் தன்னுடைய குருநாதர் பாராட்டும்போது தான் அவரது மாணவனுக்கு மிகப்பெரிய கௌரவமும் பெருமையும் உண்டாகிறது. அப்படி ஒரு மனம் திறந்த பாராட்டு கடிதம் ஒன்றைத்தான் தனது சிஷ்யன் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றி குறித்து அவரது குரு பாக்யராஜ் எழுதியுள்ளார்..

அதில், “தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதிய பாதை போட்டிருக்கிறாய். தியேட்டரில் எழுந்த ஒவ்வொரு கைதட்டலும் உன்னைத்தாண்டி என்னிடம் வந்து சேர்ந்தது. என் குருநாதர் இந்த 74 வயதிலும் படத்திற்கு பூஜை போட்டுக்கொண்டிருக்கிறார். இதே கவனமும் உழைப்பும் பொறுப்பும் தொடருமானால் .. தொடரும்.. என் குருவின் வயதிளும் வெற்றி விழாக்களில் உலா வருவாய்” என பூரிப்புடன் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.