தெலுங்கு ‘அஞ்சான்’ படத்தில் 20 நிமிடம் ‘ஸ்வாஹா’ ஆனது..!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘அஞ்சான்’ படத்தை பற்றி பலவித எதிர்மறை விமர்சனங்கள் வெளியானாலும் கூட படத்தில் சூர்யா நடித்துள்ள ராஜுபாய், கிருஷ்ணா ஆகிய இரட்டை வேடங்களில் உள்ள சஸ்பென்சை ஆடியன்ஸ் நன்றாகவே ரசிக்கிறார்கள்.

அதனால் அந்த சஸ்பென்சை உடைக்காமல் விமர்சனம் எழுதுங்கள் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. அதேபோல படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில் சொல்வது படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்பதைத்தான்.

அதனால் தான் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியான ‘அஞ்சான்’ படத்தின் நீளத்தை அங்குள்ள விநியோகஸ்தர்கலின் ஆலோசனைப்படி கிட்டத்தட்ட 20 நிமிடம் வரை தியேட்டர்காரர்களே ட்ரிம் பண்ணியுள்ளார்களாம். தமிழிலும் அதேபோல செய்தால் படத்தின் விறுவிறுப்பு கூடும் என இங்குள்ள ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.