ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நாசரை மிரட்டிய சித்தார்த்…!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘காவியத்தலைவன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் வைத்து நடைபெற்றது. அதன் பின்னர் மாலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். இதில் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டது இன்ப அதிர்ச்சி.

சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா ஆகியோருடன் நாசரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இது நாடகக்கலை சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஒரு நாடக கலைஞராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்த நாசர் இந்த சந்திப்பில் மிகப்பெரிய பங்கெடுத்துக்கொண்டு இந்தப்படத்தில் பங்குபெற்ற மூத்த நாடக கலைஞர்களை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் படக்குழுவினர் சார்பில் அந்த நாடக கலைஞர்கள் ஐந்து பேருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கையால் வெகுமானம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

கதாநாயகன் சித்தார்த் பேசும்போது “இந்தப்படத்தில் நடித்த நாட்களில், நாசர் சார் எங்களுக்கெல்லாம் ஒரு சங்கரதாஸ் சுவாமியை போல கூடவே இருந்து இந்தப்படம் நல்லாவரும்.. நூறு நாள் நல்லா ஓடும் என அடிக்கடி உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார்.. இல்லையா சார்..” என நாசரை திரும்பி பார்த்தபடி, “அப்படி மட்டும் ஓடாட்டி….” என செல்லமாக நாக்கை துருத்தி மிரட்ட, நாசர் உட்பட மேடையில் இருந்த அனைவருமே சிரித்து விட்டனர்.