லிங்குசாமி – பார்த்திபனுடன் கோதாவில் குதிக்கும் முத்துராமலிங்கன்..!

பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி இயக்கும் படம் தான் ‘சினேகாவின் காதலர்கள்’. வரும் ஆகஸ்ட்-15ஆம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ மற்றும் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படங்களுடன் இந்தப்படமும் வெளியாக இருக்கிறது.

இயக்குனர் முத்துராமலிங்கனுக்கு தன்னம்பிக்கை அதிகம். அதுதான் சூர்யா படம் ரிலீஸ் ஆனால் என்ன, என் படமும் ஓடும் என துணிச்சலாக இந்த முடிவெடுக்க வைத்திருக்கிறது. மேலும் தனது கதையில் அவர் வைத்துள்ள அபார நம்பிக்கையும் இன்னொரு காரணம்..

இந்தப்படம் ஒரு இளம் பெண்ணின் வாழக்கையில் கடந்து செல்லும் சில ஆண்களைப் பற்றிய கதை. அந்த ஆண்களில் அந்த பெண் யாரை தன் துணையாக தேர்வு செய்கிறாள், அது ஏன் என்பது மாதிரியான கதை.. அழகர்சாமியின் குதிரை’ படத்தில் ஹீரோயினாக நடித்த அத்வைதா இதில் ஹீரோயின் மற்ற அனைவரும் புதுமுகங்கள்.

கலைக்கோட்டு உதயம் தயாரித்துள்ள இந்தப்படம் அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்றும் இதன் முன்னோட்ட காட்சியை பார்த்த சிலர் சொல்கின்றனர். லிங்குசாமி, பார்த்திபன் இவர்களுடன் ஒரு பத்திரிகையாளரான முத்துராமலிங்கனும் ஒரு இயக்குனராக வெற்றிபெற வாழ்த்துவோம்..