பத்மஸ்ரீ பட்டத்தை இழக்கும் நிலையில் சயீப் அலிகான்..!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சயீப் அலிகானுக்கு அவரது கலைச்சேவையை பாராட்டி 2010ல் மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஆனால் தற்போது அந்த பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

காரணம் கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தகரைல் ஈடுபட்டதாக போலீசார் அவர்மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ பட்டம் மத்திய அரசால் பறிக்கப்பட்டு விடும். இதிலிருந்து தப்புவாரா சயீப் அலிகான்..?