சாலை விதியை மீறியதால் அதர்வாவுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

‘பரதேசி’ படத்திற்குபின் அதர்வா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் ‘இரும்புக்குதிரை’.. யுவராஜ் போஸ் என்பவர்இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.. கதாநாயகியாக பிரியா ஆனந்தும், முக்கிய வேடத்தில் ராய் லட்சுமியும் நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக ‘ஏழாம் அறிவு’ மிரட்டல் வில்லன் டாங்லீ நடித்திருக்கிறார்.. இந்தப்படத்தில் அதர்வா ஒரு பைக் ரேஸராக நடித்துள்ளார். கல்பாத்தி அகோரம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடைபெற்றது.

அதை தொடர்ந்து இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் யுவராஜ் போஸ், “தற்போது பைக்ரேஸ் என்ற பெயரில் நடைபெறும் அராஜகத்தை இந்தப்படத்தில் நாங்கள் தொடவில்லை. இது முறையான பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட கதை. அதர்வா கூட இந்தப்படத்தில் சாலை விதிகளை மீறாத, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டும் இளைஞனாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு முறை சாலை விதிகளை மீறி சிக்னலை கிராஸ் செய்யும்போது அதனால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்று கூறினார்.