விக்ரம் படத்தில் சூர்யா நடிப்பது உறுதியானது..!

‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் இயக்குனர் விக்ரம் கே.குமார்.. இதைத்தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறது.. தற்போது ‘அஞ்சான்’ படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக வெங்கட்பிரபு டைரக்ஷனில் ‘மாஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார். அதை முடித்துவிட்டு அடுத்த வருட துவக்கத்தில் விக்ரம் குமாரின் படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.