ரகுவரனுக்கு தனுஷின் மரியாதையும் நன்றிக்கடனும்..!

“அமுல்பேபி.. ரகுவரனை நீ வில்லனாத்தான பார்த்திருப்ப.. ஹீரோவா பாத்ததில்லையே.. இனிமே பார்ப்ப..” இன்றைக்கு தேதிக்கு இதுதான் தமிழ்நாட்டில் ஹாட்டான பஞ்ச் டயலாக். தனுஷ் பேசுகிறார் என்பதற்காக மட்டும் அல்ல.. ரசிகர்களிடம் ரகுவரனின் தாக்கம் அந்தமாதிரி..

ஆனால் தனுஷுக்கும் ரகுவரனுக்குமான நெருக்கம் ஆத்மார்த்தமானது. அது ‘யாரடி நீ மோகினி’ படத்தில் தந்தை மகனாக நடித்தபோதே ஏற்பட்ட பந்தம். அப்போதே தனக்கு ரகுவரனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷப்பட்டார் தனுஷ்.

இப்போது வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற இந்த டயலாக்குக்கு ஏற்றமாதிரி எந்த நடிகரின் பெயரை பயன்படுத்தலாம் என்று பேச்சு எழுந்தபோது ரகுவரனின் பெயரை முதல் ஆளாய் முன்மொழிந்து தனது நேசத்தை வெளிப்படுத்தினாராம் தனுஷ்..