பொதுமக்கள் முன்னிலையில் சமந்தாவை அழவைத்த பிரியங்கா சோப்ரா..!

பிரியங்கா சோப்ரா அமைதியானவர் ஆயிற்றே.. தன்னுடைய வாய்ப்பை தட்டிப்பறித்தவர் ஆனாலும் ஜஸ்ட் லைக் தட், கண்டுக்காமல் ஒதுங்கிப்போகிறவர் சமந்தாவை எதற்காக அழவைத்தார்.. என்ன நடந்திருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் யோசிப்பவர்கள் முதலில் பிரியங்காவிடம் மனதார மன்னிப்புக்கேட்டு விடுங்கள்.

இது செண்டிமெண்ட் அழுகை.. பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரி கோம்’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. சில தினங்களுக்கு முன் விமான நிலையத்தில் பொதுமக்களுடன் விமானத்திற்காக காத்திருந்த சமந்தா இந்த ட்ரெய்லரை பார்த்ததும் அவரையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாம்.. “காரணம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” என ட்வீட் தட்டியிருக்கிறார் சமந்தா..