ஷாப்பிங் மாலில் கலாட்டா செய்தாரா ஸ்ருதிஹாசன்..?

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன், ரிகர்சலின்போது கிடைத்த இடைவெளியில் அருகில் இருந்த ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு போனாராம்.. அங்கே மேக்கப்பிறகான அழகு சாதனப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றினுள் நுழைந்த ஸ்ருதி கடையில் இருக்கும் விற்பனையாளர்களில் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அழகு சாதனத்தை கேட்க, அவரோ அது தங்களிடம் இல்லையென தேடிப்பார்க்கமலேயே கூறினாராம்..

இதனால் டென்ஷனான ஸ்ருதி “நான் உங்களிடம் கேட்ட பொருள் இருக்கா இல்லையான்னு அட்லீஸ்ட் செக் பண்ணிகூட பார்க்காம இல்லைன்னு சொல்றீங்க.. உங்களால அந்த வேலைய பார்க்க முடியலைன்னா, பொறுப்பான இன்னொருத்தரை என்னை அட்டென்ட் பண்ணச் சொல்லிருக்கணும்” என்று கோபமாக கூறிவிட்டு வேறு கடைக்கு போய்விட்டாராம்.. அன்றைய தினம் ஷாப்பிங் மால் முழுதும் இதே பேச்சாகத்தான் இருந்ததாம்.