வருகின்ற மே 26, 2014 அன்று நடக்கவிருக்கும் நரேந்திர மோடி’யின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்துகொள்வார் என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்களுடைய பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை (மே 16, 2014) அன்று நரேந்திர மோடியின் வெற்றியை அறிந்த ராஜபக்சே நரேந்திர மோடி’யை வாழ்த்தி அவரை இலங்கைக்கு அழைத்துள்ளார். இதற்கு நரேந்திர மோடி, தான் வருவதாக ஒத்துக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்ற செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான கெஹிலியா ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.