“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்திற்கு “U” தணிக்கை சான்றிதழ்:

தெலுங்கு திரைஉலகின் மிக சிறந்த இயக்குனர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் 2010’ம் ஆண்டில் இயக்கிய தெலுங்கு திரைப்பட “மரியாதை ராமனா”. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த திரைப்படத்தை தமிழில் தயாரித்து அதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக நடிகர் சந்தானம் ஆசைப்பட்டார். சந்தானம், எஸ்.எஸ்.ராஜமௌலியை சந்தித்து “மரியாதை ராமனா” திரைப்படத்தின் தமிழ் உரிமையை பெற்றுகொண்டார்.

பின்னர், ஸ்ரீகாந்த அவருடைய நண்பரும் நடிகரும்மான ஸ்ரீநாத்தை அணுகி இந்த திரைப்படத்தை தமிழில் இயக்க வாய்ப்பு அளித்துள்ளார். இத்திரைப்படம் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்று பெயரிடப்பட்டு தயாரிக்கப்பட்டது.

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படம் இன்று தணிக்கை குழுவிற்கு திரையிடப்பட்டது. “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவின்னர் திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.