காதலுக்கு மறுப்பு..மகளை கொடூரமாக கொன்ற தந்தை..!

காதலுக்கு மறுப்பு தெரிவித்து அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், மலப்புரம் அரிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (42). இவரது மகள் அதிரா (22). இவர், அப்பகுதியின் தலீத் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரரை காதலித்து வந்துள்ளார். இதற்கு ராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ராஜனின் எதிர்ப்பையும் மீறி அதிரா அவரது காதலனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று, இருவருக்கும் இடையில் மோதல் முற்றியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த ராஜன், மகளை கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த அதிராவை அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அதிரா உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ராஜனை போலீஸ் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response