சென்னை பல்லாவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை!

murder35-12-1513052294

 சென்னை பல்லாவரம் அருகே பம்மலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பம்மலில் துணிக்கடை நடத்தி வருபவர் தாமோதரன். இவர் பம்மல் கிருஷ்ணாநகர் ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு தாய் சரஸ்வதி, மனைவி தீபா, குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோரை கழுத்தறுத்துக் கொன்று விட்டு தற்கொலை செய்ய முயன்ற தாமோதரன் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில்நஷ்டம் காரணமாக குடும்பத்தினரை கொலை செய்து தானும் தற்கொலைக்கு தாமோதரன் முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Response