குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய அமைச்சர்!

 

natalumanram

குளிக்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு தொடங்கி ஒரு மாத காலம் நடக்கும். இம்முறை குஜராத்தில் டிச. 9 மற்றும் 14ம் தேதிகளில் சட்டசபை வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பாஜகவுக்காக பிரசாரத்தில் பங்கேற்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

annthakumar
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திப்போட அரசு முயல்கிறது, இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில தினங்கள் முன்பு கண்டனம் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அறிவித்தார்.

Leave a Response