அதிமுக-வில் பிளவை ஏற்படுத்தியதே தம்பிதுரை தான்: எச்.ராஜா குற்றச்சாட்டு!

thampi_durai_long_1a_10278

சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறி அதிமுக-வில் பிளவை ஏற்படுத்தியதே தம்பிதுரை தான் என்று எச்.ராஜா விமர்ச்சித்தார். சசிகலா குடும்பத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் தம்பிதுரையின் மனம் பாதிக்கப்பட்டிருப்பாதாகவும் அவர் கூறினார்.

 

இதற்கு முன்னதாக:

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஏக மனதாக தேர்ந்நெடுக்கப்பட்டார். ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சில அதிமுக நிர்வாகிகளுக்கு மன கசப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சசிகலாவை அதிமுக நிர்வாகிகள் பலர் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறிவந்தனர். அதன் காரணமாகவே ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 10 எம்எல்ஏ-க்களுடன் தனியாக பிரிந்தார். அதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டாக பிரிந்த எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்துள்ளது. சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 9 ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response