நவ.28 முதல் தமிழகம் முழுவதும். டி.டி.வி. தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது வரும் 28ம் தேதி வேலூர், சேலம், திருச்சி மண்டலங்களில் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையை கைப்பற்றுவோம் என பழனிசாமி அணியினர் அறிவித்தனர். அவர்கள் பற்றி செய்தி போட ஆள் இல்லாததால் இந்த வக்ரபுத்தியை காட்டுவதாக கூறினார்.
மேலும். அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதங்கள் நிறைவுற்று 4வது மாதம் தொடங்கியும் மனங்கள் இணையவில்லை என அக்கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள நாஞ்சில் சம்பத், மைத்ரேயன் மனதில் 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடரும் என்றும் கூறியுள்ளார்.