மூன்றாவது நாளாக சினிமா தியேட்டார் மூடல்: பாதிக்கப்படும் போஸ்டர் ஒட்டும் சாமானிய மக்கள்!

cinema-filmes
கேளிக்கை வரி 30 சதவிகிதத்துடன், 28 சதவிகித ஜி.எஸ்.டி வரியும் செலுத்த வேண்டிய நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டார்களை மூடினர். இன்று மூன்றாவது நாளாக சினிமா தியேட்டார்கள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் மற்றும் திரைக்கு புதியதாக வரும் படங்கள் பற்றிய விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாவது வழக்கம். வரி விதிப்புக்கு எதிராக 3வது நாளாக தமிழகத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் படங்கள் குறித்த விளம்பரங்களும் வெளியாகவில்லை.

இந்த நிலை நீடித்தால் போஸ்டர் ஒட்டும் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இதற்கு உடனடியாக நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று திரைத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Response