அருகில் இருந்து பொறாமை படுபவர்களை விட கோவிலில் தேங்காய் உடைப்பவர்களையே பெரிதும் மதிக்கிறேன் – சந்தானம் ஆவேசப் பேச்சு:

நகைச்சுவை நடிகர் சந்தானம் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, நகைச்சுவை நடிகர் ஸ்ரீநாத் இயக்கும் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தின் பத்ரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இன்று (04 மே, 2014) நடைப்பெற்றது. அப்போது பேசிய சந்தானம் படம் இந்த ஆண்டு மே மாதம் 16’ம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் பேசியபோது, தான் எந்த ஒரு வி.ஐ.பி’யையும் இசை வெளியீட்டுக்கு அழைக்கவில்லை என்று சர்சைக்குரியவாறு பேசியிருந்தார். பத்ரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த சர்சைக்குரிய பேச்சை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் சந்தானம் கூறியதாவது, வசதிபடைத்தவர்கள், என்னுடைய வளர்சியைப் பார்த்து பொறாமை படுபவர்கள் என் அருகிலே இருந்தாலும், அவர்களைக் காட்டிலும் ஒரு டீக்கடையில் வேலை செய்பவரோ அல்லது கோவிலில் தேங்காய் உடைப்பவரோ தன்னுடைய வளர்ச்சியில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் நான் அவர்களை பெரிதும் மதிக்கிறேன், வரவேற்கிறேன் என்று மீண்டும் சர்ச்சை எழுப்பும் விதத்தில் கூறினார்.

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” இசை வெளியீட்டு விழாவில் சந்தானம் பேசிய ஆணவப் பேச்சினால், அவருடன் பலப்படங்களிள் நடித்த நடிகர்கள், தங்கள் சகாக்கலுடன் அவர் பேச்சை பற்றி வருத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சந்தானத்திற்க்கு பதிலாக வேறு நகைச்சுவை நடிகர்களுக்கு இனி வரும் படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க இருக்கும் “லிங்கா” படத்தில் சந்தானத்தை நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிக்கவைப்பதற்க்காக பேச்சு நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தில் சந்தானத்தின் ஆணவப்பேச்சை பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய வட்டாரத்திற்க்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் “லிங்கா” படத்தில் சந்தானம் கைவிடப்படுவார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சந்தானம் கதாநாயகனாக வளர்ந்து வரும் இந்த நேரத்தில், தன்னுடைய சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மனம் புண்படும்படியாக பேசாமல் நடந்து கொண்டால் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம்! வாயால் கெட்ட பல நடிகர்கள் நிலையை பற்றி அவர் சிந்தித்தால் சரி!!

சந்தானத்தை கதாநாயகனாக நிர்ணயிக்க மே 16’ம் தேதி உலகெங்கும் வெளியிட தயாராகிக்கொண்டிருக்கிறது “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்”.