எஸ்.பி.சரண் தயாரிக்கும் “திருடன் போலீஸ்”!!

Thirudan-police-posters3

சென்னை 28, குங்குமபூவும் கொஞ்சு புறாவும் மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்த S.P.சரணின் Capital பிலிம் works நிறுவனத்துடன் கெனன்யா film சார்பில் J.செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதைஅம்சம் உள்ள படம் ‘திருடன் போலீஸ்’.

திருடன் போலீஸ் படத்தை பற்றி படத்தின் தயாரிப்பாளர் S.P.சரண் கூறும்போது ‘நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனகெடுவேன். எனது முந்தைய படங்கள் எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது ‘திருடன் போலீஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாக படம் எடுக்கும் ஆவலை தூண்டியது.

எனது முந்தைய படங்கள் போலவே இந்த படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாக திகழும் என்பதில் ஐயமில்லை. எனது நண்பன் யுவன் ஷங்கர் ராஜா முற்றிலும் ஒரு புதிய இசையை தர உள்ளார் என்பது நிச்சயம்.

அட்டகத்தி படம் பார்க்கும் போதே எனக்கு தினேஷின் மேல் ஒரு அபிமானம் இருந்தது. அவரே இப்படத்தின் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா (ரம்மி புகழ்) நடிக்க உள்ளார்.

இவர்களுடன் பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய், நான் கடவுள் புகழ் ராஜேந்திரன் மற்றும் சில திறமையான கலைஞர்கள் நடிக்க உள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த். படத்தொகுப்பாளர் பிரவீன். கலை ஜாக்கி. நகைச்சுவை மிளிர சிந்திக்க வைக்கும் இக்கதையை எழுதி, வசனம் இயற்றி இயக்கி  அமைத்து இருப்பவர் கார்த்திக் ராஜு. திறமையான கலைஞர்கள் ஒருமித்து இருக்கும் இந்த படம் நிச்சய வெற்றி பெரும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்  தயாரிப்பாளர் சரண்.