கோடம்பாக்கத்தில் திருமணத்துக்கு தயாராகும் அடுத்த காதல் ஜோடி ஜெய்– நஸ்ரியா??

Jai-with-Nazriya-Nazim

ஜெய் – நஸ்ரியா தீவிரமாக காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் சேர்ந்து நடித்தபோது அஞ்சலியுடன் இணைத்து பேசப்பட்டார் நடிகர் ஜெய். ஜெய்யுடன் காதல் இல்லை என்றும் இனிமேல் அவருடன் சேர்ந்து படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், அஞ்சலி ஆவேசமாக மறுப்பு வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நஸ்ரியாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார் ஜெய்.

நஸ்ரியா மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் ‘நேரம்’ படம் மூலம் அறிமுகமானார். தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தில் ஜெய் உடன் சேர்ந்து நடித்து உள்ளார். இப்படம் வரும் 27-ந்தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு முன்பே இருவரும் ‘திருமணம் எனும் நிக்கா’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்தப்படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது தனுஷ் ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்து வருகிறார்.

திருமணம் எனும் நிக்கா படப்பிடிப்பில் ஜெய்க்கும் நஸ்ரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் பிறகு அது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் செய்தி பரவியுள்ளது. தனுசுடன் நையாண்டி படத்தில் நஸ்ரியா நடித்துக் கொண்டு இருக்கும்போது அங்கேயும் ஜெய் போய் வந்தாராம். கேரவேனில் நஸ்ரியாவுடன் தனிமையில் பல மணி நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து ஜெய்யுடன் நஸ்ரியா திடீரென மாயாகிவிட்டதாகவும் நீண்ட நேரத்துக்கு பிறகு திரும்பி வந்ததாகவும் கூறுகின்றனர். கோடம்பாக்கத்தில் திருமணத்துக்கு தயாராகும் அடுத்த காதல் ஜோடி ஜெய்– நஸ்ரியா என பரபரப்பாக பேசப்படுகிறது.