வென்றது தீய சக்தியா?, காதலா? அஞ்சல் துறை கிளைமாக்ஸ்!!

DSC_0279

லதா சினி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக P.சின்னுச்சாமி தயாரிக்கும் படம் ‘அஞ்சல் துறை’. இந்த படத்தில் மோகன், நாராயணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சௌபர்ணிகா, வனிஷ்கா நடிக்கிறார்கள். தமிழ்செல்வன், ஆசிஷ் மெஹ்ரா, செந்தில், வடிவுக்கரசி, போண்டாமணி, நெல்லை சிவா, பாண்டு, பெஞ்சமின், ஆர்யன் மற்றும் நாகு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை – இதேஷ். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், எடிட்டிங், இயக்கம் பொறுப்பேற்றிருப்பவர் A.R.ரபி. படத்தைப் பற்றி இயக்குனர் A.R.ரபி கூறியதாவது, “மூன்று நண்பர்கள் புதிதாக ஒரு வீட்டிக்கு வந்து தங்குகிறார்கள். அப்போது அந்த வீட்டிக்கு ஒரு தபால் வருகிறது. அதில் இரவுநேர கல்லுரியில் சேருவதற்கான தகவல் வருகிறது.

எனவே நண்பர்கள் மூன்றுபேரும் இரவு கல்லூரியில் சேருகிறார்கள். கல்லுரியில் படிக்கும் நாயகிக்கும் நாயகனுக்கும் காதல் வருகிறது. ஆனால் கல்லூரியில் தீய சக்திகள் இருப்பதாக உணர்கிறார்கள். அந்த தீயசக்தி அவர்கள் காதலுக்கு எதிர்ப்பாக மாறுகிறது. முடிவில் இவர்கள் காதல் வென்றதா? இல்லையா? என்பது திரைக்கதை. முக்கிய வேடத்தில் வடிவுக்கரசி நடிக்கிறார்.

இந்த படத்தில் “இரவு நேரம் உறவு தேடும்

இளமை தானே காதலா

எந்தன் காதலா”

என்ற பாடல் காட்சியில் மோகன், சௌபர்ணிகா பங்கேற்றனர். இந்த பாடல்காட்சி மட்டும் 3Dயில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் காட்சி திருவனதபுரத்தில் ஐந்து நாட்கள் இரவுகளில் படமாகப்பட்டுள்ளது. படம் இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது. படப்பிடிப்பு நாமக்கல், திருச்செங்கோடு, கேரளா மற்றும் திருவனந்தபுரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் A.R. ரபி.