காதலியை மணக்கிறார் ப்ளாக் பாண்டி!!

IMG-20130206-WA0000

அங்காடித்தெரு, நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. பிளாக் பாண்டியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தொலைக்காட்சியில் தொடராக வந்த கனா காணும் காலங்கள். அந்த தொட‌ரில் நடிக்கும்போது ரசிகையாக அறிமுகமாகியிருக்கிறார் உமேஸ்வ‌ரி பத்மினி என்பவர். நட்பு காதலாகி அப்போதே கசிந்துருக ஆரம்பித்திருக்கிறதர்கள்.  சுமார் 7 வருடங்கள் இந்த இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள்.

அப்போது இரண்டு வீட்டா‌ரின் சம்மதத்துடன்தான் திருமணம் என்று உறுதியாக இருந்தோம். இப்போது எங்கள் எண்ணப்படி இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி எங்கள் திருமணம் நடக்கயிருக்கிறது என்றார் பிளாக் பாண்டி.

பிளாக் பாண்டி எஸ் டாட் என்ற ஸ்டுடியோவை ஆரம்பித்துள்ளார். தனது இசையார்வத்துக்காக அவர் தொடங்கிய ஸ்டுடியோ இது. படங்களை இயக்கி, இசையமைக்க வேண்டும் என்பதே இவ‌ரின் எதிர்கால திட்டம்.