நடிகை அஞ்சலியை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்த கோர்ட்டு!

6714_14_Anjali (29)
நடிகை அஞ்சலி தலைமறைவு, சித்தியுடன் சண்டை, இயக்குனர் களஞ்சியம் கொடுமை என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அஞ்சலி குறித்து வந்த செய்திகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பெரிய புயலுக்கு பிறகு தான் ஓய்ந்தது அந்த பிரச்சினை. தற்போது தான் நிம்மதயாக இருக்கிறார் அஞ்சலி. இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்சினை அஞ்சலிக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது அஞ்சலி மீது இயக்குனர் களஞ்சியம் கொடுத்த புகார்களை விசாரிக்க கோர்ட்டு அனுப்பிய சம்மன்களை மதிக்காமலும், கோர்ட்டுக்கு வராமலும் புறக்கணித்துள்ளார் அஞ்சலி. இந்த நிலையில் கோர்ட்டை அவமதித்த காரணத்தால் நடிகை அஞ்சலியை கைது செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்டு அளித்துள்ளது.
விசாரித்தபோது நடிகை அஞ்சலி வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் 15ஆம் தேதி தான் அவர் சென்னை திரும்புவார் என்றும், அவர் வந்தவுடன் ஏர்போர்ட்டிலேயே வைத்து கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.