சமீபத்தில் வெளியாகி பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ள படம் இயக்குனர் ராமின் “தங்க மீன்கள்”! இந்த படத்தை தொடர்ந்து ராம் இயக்கும் அடுத்த படத்தை குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப் புதிய படத்துக்கு ‘தரமணி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, கட்டுமரம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் காதல்’ என்ற வாக்கியத்துடன் இப்படம் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. தரமணி என்பது ஐடி நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களின் குறியீடாகிவிட்டதால், இந்தக் கதைக்களம் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது. கற்றது தமிழ் மாதிரி, இளையோரின் சமூக அவலங்கள் குறித்த ராமின் அழுத்தமான பார்வை நிச்சயம் இடம்பெறும் என கருத்துக்கள் வளம் வருகின்றன.