இந்தி பட உலகில் சரித்திரத்தை மாற்றி எழுதிய “சென்னை எக்ஸ்பிரஸ்”!

Chennai-Express9151

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்.’ ரம்ஜான் ஸ்பெஷலாக உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸானது. தமிழகத்தின் சின்னச் சின்ன நகரங்களிலும் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 3500 அரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது இந்தப் படம். சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடிக் கொண்டுள்ளது.

முதல் நாளில் 33.12 கோடி வசூல், இரண்டாம் நாளில் 28.05 கோடி, மூன்றாம் நாளில் 32.50 கோடி வசூலித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 6.75 கோடிகளை வசூலித்து, மொத்தம் ரூ 100 கோடிகளைத் தொட்டு விட்டது சென்னை எக்ஸ்பிரஸ். ஞாயிறு வரை மொத்தம் 100.42 கோடி வசூல் செய்துள்ளது.

விஜயின் தலைவா, மற்றும் பவன் கல்யாணின் அந்தரிக்கி தரேடி ஆகிய இரண்டு படங்களுமே வெளியாகததால் சென்னை எக்ஸ்பிரஸ் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலும் சக்கை போடு போட்டுள்ளது.

இந்தி படவுலகில் இதற்கு முன்பு சல்மான் கானின் ஏக் தா டைகர் ஆறு நாட்களில் நூறு கோடியை தொட்டு சாதனை படைத்திருந்தது.