லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தும் இசைஞானி!

IMG_2501

உலகம் முழுக்க நிறைய நாடுகளில் இசைஞானி இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள லண்டனில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஆகஸ்ட் 24ஆம் தேதி லண்டனில் O2-வில் நடக்கிறது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், சாதனா சர்கம், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் உட்பட 19 முன்னணி இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு பாடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான கமல்ஹாசனும் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்பது குறித்து விஸ்வரூபம் 2 படப்பிடிப்பிலிருந்த கமல் அளித்துள்ள வீடியோ பேட்டியில், “விஸ்வரூபம்-2 கிட்டத்தட்ட 90% முடிந்துவிட்டது. இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பேட்டியைக் கொடுக்கிறேன். தாடையில் இருக்கும் இந்தக் காயம் கூட விஸ்வரூபத்தில் ஏற்பட்டதுதான்.

ஆனால் அது அங்கே வரும்போது ஆறிடும். அது என்னவோ தெரியல. என்ன மாயமோ தெரியல. என்ன மேஜிக்கோ தெரியல. இளையராஜா இசைன்னாலே காயம் கூட தன்னால ஆறிடும். ஆகஸ்ட் 24 ஓ2 லண்டன். உங்களுடன் நானும். இளையராஜாவின் ரசிகனாக. அங்கே அமர்ந்திருப்பேன். வணக்கம்”, என்றார்.