பயந்த போலீஸ் அதிகாரி கருணாஸ்!!

15cp_itsy_ragalapu_1053491g

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தையடுத்து தனது கென் மீடியா பட நிறுவனம் சார்பாக கருணாஸ் தயாரிக்கும் படம் “ரகளபுரம்” இப்படத்தில் கதைநாயகனாக கருணாஸ் நடிக்கிறார். கதாநாயகியாக அங்கனாராய் நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, ரேகா, பரத் ரெட்டி, பவன், டெல்லி கணேஷ், உமா பத்மநாபன்,  V.ஞானவேல், அழகு, மனோபாலா, ஷகிலா, மயில்சாமீ, சஞ்சனா, O.A.K.சுந்தர், அருள்மணி, பெஞ்சமின்,  வையாபுரி, கோட்டை குமார், இவர்களுடன் கருணாஸ் மகன் கென் ஆகியோர் நடிக்கிறார்கள். பாடல்  காட்சிகளுக்காக ஷபீனா கான், ஏக்தா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வேல்ராஜ், பாடல்கள் – வைரமுத்து, இசை – ஸ்ரீகாந்த்தேவா, எடிட்டிங் -T.E.கிஷோர், திரைக்கதை, வசனம், இயக்கம் மனோகர்.

படம் பற்றி இயக்குனர் மனோகரிடம் கேட்டோம், “யாருக்கும் அலுக்காத விஷயம் காமெடி தான் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒரு சில விஷயங்கள் பிடிக்கும் அப்புறம் பிடிக்காமல் போய்விடும். எல்லா வயதினருக்கும் எப்போதுமே பிடித்த, சலிக்காத விஷயம் காமெடி தான் அதைத்தான் படமாக்கி இருக்கிறோம்.

கருணாஸ் பயந்த போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். கம்பீரமாக இருக்க வேண்டிய காக்கி சட்டை  இங்கே பயந்த ஒருவனுக்கு கிடைக்கும் போது என்ன மாதிரியான விளைவுககளை ஏற்படுத்துகிறது என்பதே திரைக்கதை. இது கருனாஸுக்கு இன்னொரு பரிணாமத்தை நிச்சயம் உருவாக்கி தரும் என்று உறுதியாகச்  சொல்ல முடியும். காஞ்சனா படத்திற்கு பிறகு கோவை சரளாவுக்கு பெயர் பெற்றுத்தரும் படமாக ரகளபுரம் இருக்கும் என்கிறார்.