வித்தியாசமான பாடலுக்காக மெனக்கெட்ட ஆண்ட்ரியா!

Andrea_15271

திரு திரு துறு துறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை. லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்திக் குமார் ஜோடியாக கன்னட நாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு வித்தியாசமான பேய் பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலை பாடியிருப்பவர் ஆண்ட்ரியா. பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே மெனக்கெட்டுள்ளார் ஆண்ட்ரியா.

இது குறித்து இயக்குனர் நந்தினி கூறுகையில், “ஆண்ட்ரியா பாடிய பாடல் படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது. அஸ்வத்தின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.